Sunday, February 7, 2016

இறை இலக்கணம்
சித்தாந்த சிகாமணி
பேராசிரியர் க. வடிவேலாயுதனார், M. A.,
தமிழ்த்துறைத் தலைவர், சென்னைக் கிறித்துவக் கல்லூரி, தாம்பரம்

சிவஞான பூஜா மலர்துந்துபி ஆண்டு - (1982)
பிரசுரம்: ஆங்கீரஸ S. வேங்கடேச சர்மா, மேலமாம்பலம், சென்னை – 600 033]
     
      சைவ சமயத்துக்கு உயிர் நாடியாக உள்ளவை பதினான்கு சாத்திரங்களும் பன்னிரண்டு திருமுறைகளுமேயாம் என்பது ஆன்றோர் துணிபாகும். இவைகள் அனைத்தும் முதனூல்களேயாம். இதற்கு மாறான கருத்தும் உண்டு.

      பதினான்கு சாத்திரங்களும் திருமுறைகளின் கருத்துகளை அடியொற்றி இயற்றப் பெற்றுள்ளன. பதினான்கு சாத்திரங்களுள் எட்டு நூல்களை அருளியவர் உமாபதி சிவாசாரியார் ஆவர். அவைகள் சிவப்பிரகாசம், திருவருட்பயன், வினாவெண்பா, போற்றிப் பஃறொடை, கொடிக்கவி, நெஞ்சுவிடுதூது, உண்மைநெறி விளக்கம், சங்கற்ப நிராகரணம் என்ற எட்டு நூல்களாகும். இவற்றை ‘சித்தாந்த அஷ்டகம்’ என்ற பெயரால் வழங்குதல் மரபு.
      இவற்றுள் திருவருட்பயன் என்ற நூல் திருக்குறள் போன்று குறட்பாக்களால் இயன்றது. பத்து அதிகாரங்களை உடையது. ஒவ்வொரு அதிகாரமும் பத்துக் குறள்களையுடையன. நாற்பொருளாகிய அறம், பொருள், இன்பம், வீடு என்றவற்றுள் மூன்று பொருள்களையே திருக்குறள் விரித்து விளக்கியுள்ளது. என்றாலும், முப்பாலில் நாற்பால் மொழிந்தவர் (திருவள்ளுவ மாலை – 19) என்றும், அறம் பொருளின்பம், வீடென்னுமந் நான்கின், திறந்தெரிந்து செப்பியதேவு; (திருவள்ளுவ மாலை – 8) என்றும், திருவள்ளுவரைப் புலவர் பெருமக்கள் பலரும் உளமுவந்து போற்றிப் பாராட்டியுள்ளார்கள். அது திருக்குறளை நன்கு ஆய்வாருக்கு ஏற்புடைய கருத்தே.

      எனவே ‘திருக்குறளை அடியொற்றி அதன்கண் குறிப்பாகக் கூறப்பெற்றுள்ள மெய்ந்நூற்பொருளின் விளக்கமாக அருளிச்செய்யப் பெற்ற சைவசித்தாந்த நூலே ‘திருவருட்பயன்’ என்று ஆராய்ச்சிப் பேரறிஞர் க. வேள்ளை வாரணனார் கூறுவது மிகவும் பொருத்தமான விளக்கமாகும்.

      திருக்குறள் நூலுக்குப் பேருரை வகுத்த பரிமேலழகர் வீடு என்பது சிந்தையும் மொழியும் செல்லா நிலைமைத்து ஆகலின், துறவறமாகிய காரணவகையாற் கூறப்படுவதல்லது இலக்கணவகையாற் கூறப்படாமையின், நூல்களாற் கூறப்படுவன ஏனை மூன்றுமேயாம் என்று விளக்கந்தந்துள்ளது சிந்தனைக்குரியது. அக்கருத்தினை நிறைவேற்று வார்போல உமாபதி சிவாசாரியார் இலக்கணவகையால் திருவருட்பயனைச் செய்துள்ளார் எனக் கோடல் ஒரு வகையில் அமைதி கொள்ளும் கருத்தாகும்.
      நூறு குறள் வெண்பாக்குளுள் முதலாவதாக விளங்குவது,

                அகர வுயிர்போல் அறிவாகி யெங்கும்
            நிகரிலிறை நிற்கும் நிறைந்து

என்று குறள்வெண்பா. இது கடவுள் வாழ்த்துப் போல விளங்குகிறது. இதன் பொருள்விளக்கமே இந்நூலின் ஏனைய தொண்ணூற்றொன்பது குறட்பாக்களும் என்று ஒருவாறு விளக்கம் தரலாம். ‘அகர முதல’ எனத் திருவள்ளுவர் தம்நூலைத் தொடங்கியிருப்பதும் ஈண்டு ஒப்புநோக்கத்தக்கது.

      எழுத்துக்களுக்கெல்லாம் ‘’ கரம் ஆகிய எழுத்து உயிராய் நின்றாற்போலத் தனக்கு ஓர் உவமன் இல்லாத் தலைவனாகிய கடவுள், ஆன்மாக்களுக்கெல்லாம் அறிவாகி, சடப்பொருளிலும் சித்துப்பொருளிலும் ஒழிவற நிரம்பி ஞானவுருவாய் அழிவின்றி நிலைபெறுவான் என்பது இக்குறளின் திரண்ட பொருளாகும்.

      இக்குறளின் ஒவ்வொரு சொல்லும் நிரம்பப் பொருள் ‘செறிந்ததாய் அமைந்துள்ளமையை இனிக் காண்போம். ‘அ’கர எழுத்து உந்தியினின்று எழும். உதானன் என்ற காற்றெழுப்ப எழுந்து, கண்டத்தைப்பொருந்தி முயற்சி விகாரமின்றி இயல்பாக இயங்கும் ஒலியாம் என்று கூறுவர். இவ்வொலியினாற்றன் ஏனைய ஒலிவடிவமாகிய எழுத்துக்கள் யாவும் இயங்கும். இவ்வொலி இல்லையாயின் மற்ற எழுத்துக்கள் இயங்கமாட்டா. வாயைத் திறந்த அளவிலேயே ‘’கரம் தோன்றும் என்பது உண்மையாயினும் அதற்கு மேலும் ஒரு சிறப்பு உண்டு. வாயைத் திறவாமல் மெளனமாக இருக்கும் போதும் நாதமாகிய ஒலியாக இருப்பதும் ‘அ’கரமே. அதனால் எல்லா எழுத்துக்களிலும் ‘அ’கரம் இரண்டறக் கலந்திருக்கிறது. ‘மெய்யின் இயக்கம் அகரமொடு சிவனும்’ என்ற தொல்காப்பிய எழுத்ததிகார மொழி மரபு 13-ம் சூத்திரத்திற்கு உச்சிமேற் புலவர் கொள் நச்சினார்க்கினியர் எழுதிய விளக்கம் ஈண்டு ஒப்பு நோக்கி மகிழ்தற்குரியது.

      இங்ஙனம் மெய்க்கண் ‘அ’கரம் கலந்து நிற்குமாறு கூறினாற் போலப் பதினோருயிர்க்கண்ணும் ‘அ’கரம் கலந்து நிற்கும் என்பது ஆசிரியர் கூறராயினார், அந்நிலைமை தமக்கே புலப்படுத்தலானும் பிறர்க்கு இவ்வாறு உணர்த்துதல் அரிதாகலானும் என்று உணர்க, இறைவன் இயங்கு திணைக் கண்ணும், நிலைத்திணைக்கண்ணும், பிறவற்றின்கண்ணும் அவற்றின் தன்மையாய் நிற்குமாறு எல்லார்க்கும் ஒப்ப முடிந்தாற் போல, ‘அ’கரமும் உயிர்க்கண்ணும், தனிமெய்க் கண்ணும் கலந்து அவற்றின் தன்மையேயாய் நிற்கும் என்பது சான்றோர்க்கெல்லாம் ஒப்ப முடிந்தது. ‘அகரமுதல’ என்னும் குறளான். ‘’கரமாகிய முதலையுடைய எழுத்துக்களெல்லாம்; அது போல இறைவனாகிய முதலையுடைத்து உலகம் என திருவள்ளுவனார் உவமை கூறியவாற்றானும், கண்ணன் ‘எழுத்துக்களில் ‘’கரமாகின்றேன் யானே’ எனக் கூறிய வாற்றானும் பிறநூல்களானும் உணர்க.

      இவ்வளவு சிறப்பான காரணங்களால் இறைவனுக்கு ‘அ’கரம் உவமையாயிற்று. உவமேயப் பொருளினும் உவமானப்பொருள் சிறந்திருத்தல் மரபு. ஆயினும் இறைவனைக் காட்டிலும் சிறந்த உவமானம் இல்லை. ஆகையால் இவ்வுவமானம் சிறந்ததாகக் கொள்ளப்பட்டது. எனினும் ‘அ’கர ஒலி சடப்பொருளாகும். சடப்பொருளுக்கு உயிர் இன்மையின் அறிவு கிடையாது. இறைவன் ‘அ’கரத்தைவிட உயர்ந்தவன் என்று வேறுபாடு தோன்ற ‘அறிவாகி’ என்ற சொல்லைப் பயன் படுத்தி இறைவனது தூய அறிவினைக் காட்டினார். திருவள்ளுவனாரும் தமது நூலில் ‘வாலறிவன்’ என்று கூறியுள்ளது ஒப்பு நோக்கத் தக்கது. எங்கும் நிறைந்தவன் என்பதையும் அவனுக்கு எதுவும் உவமையாகாது என்ற பொருளும் தோன்ற ‘எங்கும் நிகரில் இறை’ என்று சிறப்பித்துள்ளார் உமாபதி சிவனார். ‘உவமன் இல்லி’ என்பது தேவாரம்.

      இறைவன் கட்டியறிப்படாதவன். மனம் வாக்குகளால் சிந்திப்பதற்கும் ஓதுதற்கும் அரியவன். அவன் அசைவற நிற்பவன் என்ற கருத்துத் தோன்ற, ‘நிறைந்து’ என்ற சொல்லை ஆண்டுள்ளார். என்றும் அழியாது நிலைத்து நிற்பவன் என்ற கருத்தினை ‘நிற்கும்’ என்ற பதம் விளக்கியுள்ளது மகிழ்ந்து இன்புறத் தக்கது.

      இவ்வாறு திருக்குறளைப்போலப் பதசாரம் நிறைந்து ‘திருவருட்பயனை’ ஓதி உணர இவ்வொரு குறள் வெண்பாவே சிறந்த சான்றாகும். இதனை அருளிய சந்தானாசாரியருள் ஒருவராகத் திகழும் உமாபதி சிவாசாரியார் திருவடிகளை வணங்கி வாழ்த்துவோமாக.

சிவம்


Saturday, February 6, 2016

சிவமயம்
மத்ஸ்யபுராணக் கதைகள்

Dr. . கங்காதரன் M. A., M. litt., Ph. D.,
ஸம்ஸ்க்ருத விரிவுரையாளர், சென்னைப் பல்கலைக்கழகம்

[சிவஞான பூஜா மலர்துந்துபி ஆண்டு - (1982)
பிரசுரம்: ஆங்கீரஸ S. வேங்கடேச சர்மா, மேலமாம்பலம், சென்னை – 600 033]

முன்னுரை
      
   பதினெட்டு மஹாபுராணங்களில் ஒன்றானதும் மிகப் பழமையானதுமான மத்ஸ்யபுராணம் 290 அத்தியாங்கள் கொண்டது. திருமாலைக் குறித்துத் தவமியற்றிய மனுவின் தவத்தினால் மகிழ்ந்த திருமால் அவனை வரம் யாதுவேண்டும் என்று வினவ அவனும் பிரளயகாலம் வந்துற்ற்பொழுது உலகமனைத்தையும் காத்திடும் ஆற்றலைத் தான் பெற்றிட வேண்டினான். அவ்வாறே அருளிய திருமால் முன்னோர்களுக்கு அஞ்ஜலி செய்ய நீர் ஏந்திய மனுவின் கையளவு நீரில் ஒரு மீன் வடிவில் தோன்றித் தன்னைல் காத்தருள வேண்டினார். பின்னர் படிப்படியாக அதன் உருவம்பெரிதாவதைக் கண்டு வியந்த மனுவும் அதை முறையே பெரும் நீர்த்தேக்கங்களில் இட்டு காத்துவர, மீனும்என்னை இம்மாதிரி காக்குங்கால் பிரளயகாலம் வந்துற்ற பொழுது உன்னையும் உலகினையும் காப்பேன்என்று கூறியது. பின்னர் பிரளயம் வந்தபொழுது உலகின் உயிரினங்களனைத்தையும் மனுவுடன் ஒரு படகில் ஏறும்படிச் செய்து அதை நீரில் மூழ்காமல் காத்தருளல் முதல் அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ளது. பின்னர் மனுவிற்கு மீன் வடிவில் தோன்றிய திருமால் கதைகளைக் கூறுவதாகக் கொண்டு அமைந்திருப்பதால் இப்புராணம் மத்ஸ்யபுராணம் (மத்ஸ்யம் என்றால் மீன் என்று பொருள்) என அழைக்கப்படுகிறது.
      மிகப் பழமையான புராணமானபடியால் புராணங்களுக்கு இருக்க வேண்டிய ஐம்பெரும் அம்சங்கள் பெருமளவு காணப்படுகின்றது என்று சொல்லலாம். உலகின் படைப்பைப் பற்றியும், மனுவின் வழி தோன்றியவர்களின் விவரமும், சந்திர சூரிய வமிச மன்னர்களின் பரம்பரையும், மற்றும் பல்வேறு நோன்புகள், தானங்கள், புண்ணிய தல வரலாறுகள் முதலியனவும், விண்ணவர் தானவர் இவ்விருவருக்குமிடையே நடைபெற்ற கடும் போரைப் பற்றியும், தாரகன் என்னும் அரக்கனின் வரலாறும், திரிபுரம் எரித்த வரலாறும் இங்கு விவரித்து கூறப்பட்டுள்ளன. மேலும் புண்ணிய பூமியான காசியின் மேன்மையை விளக்கி விரிவாகவும், சிவ வழிபாட்டு முறைகளை விளக்கும் பல்வேறு அம்சங்களையும் கொண்டுள்ளது இப்புராணம். இப்புராணத்திலும் யயாதி முதலானவர்களின் வரலாறு போன்ற பல கதைகள் இருப்பினும் சிவரமாக உள்ள கதைகளை மட்டும் இங்கே காண்போம்.

மயன் என்னும் அரக்கனின் வரலாறு: -

      முன்னொரு ஸமயம் மயன் என்றொரு அரக்கனிருந்தான். விண்ணவரால் போரில் தோல்வியுற்ற அவன் கடுந்தவம் புரிந்தான். அவனுடன் வித்யுந்மாலீ, தாரகன் என்னும் இரு அரக்கர்களும் தவம் செய்தனர். அவர்கள் மூவரும் தவம் செய்யுங்கால் மூன்று எரியும் நெருப்பு ஜ்வாலைகள் போல் காட்சி அளித்தனர். குளிர் காலத்தில் நீரில் நின்றும் கோடக்காலத்தில் நாற்புறமும் நெருப்பு சூழவும் மேலே சூரியனின் கடும் கதிர்கள் எரிக்கவும், மழைக்காலத்தில் வானிலிருந்தும் தவமியற்றினர். அவர்கள் தவத்தினால் உலகமனைத்தும் அல்லலுற்றது. அவர்கள் தவத்தினால் மகிழ்ந்த நான்முகன் அவர்கள் முன் தோன்றி அவர்களைக் கேட்டார்.

நான்முகன்:  நான் வரமளிக்க உங்கள் முன் தோன்றி உள்ளேன். நீங்கள் வேண்டுவது என்ன?
மயன்:      ‘தாரகாமயம்என்னும் போரில் நாங்கள் முன்னர் தேவர்களால் வெல்லப்பட்டோம். அதனால் யாது செய்வது என்றறியாது தவம் செய்யத் துவங்கினோம். இப்பொழுது தேவர்களாலும், மற்றும் முனிவர்களின் சாபத்தினாலும் வேறு எந்தவிதமாகவும் அழிக்க முடியாத மூன்று கோட்டைகளை எங்களுக்கு அருள் வேண்டும்.
நான்முகன்:  யாதொன்றாலும் அழிவற்றது என்பது இயலாத காரியம்.
மயன்       அப்படியாயின் சிவனார் ஒரே ஸமயம் ஒரு அம்பினாலேயே எங்கள் கோட்டைகளை எரிக்கட்டும். மற்ற எந்த காரணத்தின் மூலமாகவும் எங்களுக்கு அழிவு ஏற்படக்கூடாது.
நான்முகன்:  அப்படியேயாகட்டும்.

இவ்விதம் அருளி நான்முகன் மறைந்த பின்னர் மயன் மிகவும் ஆலோசனை செய்து பொன், வெள்ளி, இரும்பு இவைகளால் தனித்தனியாக ஆன மூன்று மாபெரும் அளவுகளுள்ள கோட்டைகளை உருவாக்கினான். இவைகள் முறையே வானத்திற்கு மேல்புறமும், வானிலும், புவியிலும் அவ்வரக்கர்கள் விருப்பின்படி சென்று மற்றவரை அச்சுறுத்துமாறு இயக்கினான். தங்கள் இருக்கைக்கு உகந்தமாதிரி அவைகளில் நீர்நிலைகள், நந்தனங்கள் முதலியன ஏற்படுத்தி அரக்கர்கள் அனைவரும் தம் சுற்றம் சூழ அக்கோட்டைகளில் அந்தி வேளையில் நுழைந்தனர். பின்னர் ஒரு ஸமயம் மயன் அரக்கர்களைக் கூட்டி தான் கண்ட கெட்ட கனவைக் கூறி அவர்களை அறவழியில் தளராது செல்ல வேண்டினான். முன்னர் நல்வழியின் பயனாக பெரும் பேற்றுடன் வாழ்ந்து வந்த அவர்கள் தமக்கு இன்னல் வரும் என்றறிந்த உடனேயே அறவழியைத் துறந்து தீயவழியில் செல்லத் தலைப்பட்டனர். மயனால் உரைக்கப்பட்ட அறிவுரைகளை அவர்கள் புறக்கணித்து தேவர்களின் நந்தவனம், வசிக்குமிடம் முதலியனவற்றை அழிக்க முற்பட்டனர்.

இதனால் அல்லலுற்ற ஆதித்யர்கள், வஸுக்கள், ஸாத்யர்கள், பித்ருக்கள், மருத்கணங்கள் முதலியவர்கள் நான்முகனிடம் முறையிட்டனர். தேவர்களின் முறையீட்டைக் கேட்ட நான்முகன் தான் மயனுக்களித்த வரன் செயல் படுங்காலம் நெருங்கிவிட்டது என்று கூறி அவர்களின் முப்புரங்களையும் ஒரே பாணத்தால் அழிக்க வல்லவர் சிவனாரே என்று கூறி அவர்களனைவருடன் கைலாயம் சென்று அன்னை உமையுடனும் நந்திகேசுவரருடன் கூடிய சிவனாரைப் பின்வருமாறு புகழ்ந்து பாடினார்.

நமோ பகவதேசாய ருத்ராய வரநாய |
பசூனாம் பதயே நித்யம் உக்ராய கபர்தினே ||

மஹாதேவாய பீமாய த்ரயம்பகாய சாந்தயே |
ஈசானாய பயக்னாய நமஸ்த்வந்தக காதினே ||

       நீலக்ரீவாய பீமாய வேதஸே வேதஸாஸ்துதே |
       குமாரசத்ரு நிக்னாய குமாரஜனகாய ||

       விலோஹிதாய தூம்ராய வராய க்ரதனாய |
       நித்ய நீலசிகண்டாய சூலினே திவ்யசாயினே ||
      
       உரகாய த்ரிநேத்ராய ஹிரண்யவஸுரேதஸே |
       அசிந்த்யாயாம்புகாபர்த்ரே ஸர்வதேவஸ்துதாய ||

       வ்ருஷத்வஜாய முண்டாய ஜடினே ப்ரஹ்மசாரிணே |
       தப்யமானாய ஸலிலே ப்ரஹ்மண்யாயாஜிதாய ||

       விச்வாத்மனே விச்வஸ்ருஜே விச்வமாவ்ருத்ய திஷ்டதே |
       நமோ ஸ்து திவ்யரூபாய ப்ரபவே திவ்யசம்பவே ||

       அபிகம்யாய காம்யாய ஸ்துத்யாயார்ச்யாய ஸர்வதா |
       பகதானுகம்பினே நித்யம் திசதே யந்மனோகதம் ||
     
      இவ்விதம் அவர்களால் புகழ்ந்து பாடப்பெற்ற சிவனார் அவர்களது துயர் யாது என் வினவினார்.

சிவனார் -   தேவர்களே உங்களுக்கு என்ன தீங்கு நேர்ந்தது

தேவர்கள்பிரபோ மயன் என்னும் அரக்கன் முப்புரத்தை நிருமாணித்துள்ளான். அதில் வாழும் அரக்கர்கள் அச்ச மற்றவர்களாக எங்களைத் தாக்கி எங்கள் நந்தவனம் முதலியவற்றை அழித்து, தேவ மடந்தையரையும்  தூக்கிச் சென்றுள்ளனர். மேலும் இந்திரனின் ஐராவதம் முதலான யானைகளையும் கவர்ந்து சென்றுள்ளனர்.

சிவனார் -   நீங்கள் யாவரும் அரக்கர்களினின்றும் அச்சம் தவிர்த்து இருங்கள். முப்புரத்தை நான் அழிக்கின்றேன். அதற்காக நீங்கள் செய்ய வேண்டியதை கவனமாகக் கேளுங்கள். வெற்றி வாகை சூடி வர எனக்கொரு இரதம் ஏற்பாடு செய்யுங்கள்.

சிவனார் கூறியபடியே இரதன் ஒன்றை தேவர்கள் ஏற்பாடு செய்தனர். புவி, மேரு, மந்தர மலைகள், சூரியன், சந்திரன், தேய்பிறை, வளர்பிறை, புதன், அங்காரகன், சனி முதலான கோள்களும், கங்கை, யமுனை, ஸிந்து முதலான ஆறுகளும், மற்றும் அரவங்கள் முதலியனவும் இரதத்தின் பல்வேறு பகுதிகளாகவும் மற்றும் கதை முதலான ஆயுதங்களாகவும் அமைந்தன. இரதத்தைக் கண்டு முதலான ஆயுதங்களாகவும் அமைந்தன. இரதத்தைக் கண்டு மெச்சிய சிவனார் அதற்குகந்த தேர்ப்பாகனையும், ஏற்பாடு செய்யுமாறு கூறினார். இதைக் கேட்ட தேவர்கள் செய்வ தறியாது குழம்பி நின்றனர். முன்பே திருமால், ஸோமன், அக்னி, இம்மூவரும் அம்புகள் ஆகிவிட்டபடியால் இப்பொழுது தேர்ப்பாகனாக யா உகந்தவர் என்ற சிந்தனையிலாழ்ந்தனர். அப்பொழுது அனைவரும் போற்ற நான்முகன் தானே தேரை ஓட்ட முன் வந்தார். பின்னர் நான்முகன் தேரைச் செலுத்தத் துவங்கினார். இரதத்தின் போக்கை புராணம் பின்வருமாறு விவரிக்கின்றது.

ப்ருகுர் பரத்வாஜவஸிஷ்டகெளதமா: க்ரது: புலஸ்த்ய: புலஹஸ்தபோதனா: |
மரீசிரத்ரிர்பகவானதாங்கிரா: பராசராமஸ்த்யமுகா மஹர்ஷய ||

ஹரமஜிதமஜம் ப்ரதுஷ்டுவுர்வ்சனவிஷைர் விசித்ரபூஷணை |
ரதஸ்த்ரிபுரே ஸகாஞ்சனாசலோ வ்ரஜதி ஸபக்ஷ இவாத்ரி ரம்பரே ||

கரிகரிரவிமேகஸந்நிபா: ஸஜஸ பயோத நிநாத நாதின: |
ப்ரமத கணா: பரிவார்ய தேவ குப்தம் ரதமமராபி யயு: ஸ்மதர்பயுக்தா: ||

                இதற்கிடையில் முப்புரத்தை அடைந்த நாரத மாமுனிவரை தானவர் யாவரும் வரவேற்று மரியாதை செய்தனர். தகுந்த இருக்கையில் அமர்ந்த மாமுனிவரிடம் மயன் தான் கண்ட கனவை எடுத்துரைத்து தன் ஐயம் தீர்க்க் கோரினான்.

நாரதர்: மயனே! வரும் கெடுதலைக் குறிக்கும் நிகழ்ச்சிகள் எப்படி ஏற்படுகின்றன என்று கூறுகிறேன் கேள். தாரணம் (தாங்குதல்) என்ற பொருளுடைத்த வினைச் சொல்லினின்றுதர்மம்என்ற சொல் தோன்றியது. நமக்கு நன்மை பயத்தலால் அதற்குதருமம்என்று பெயர். இவ்விதமே சான்றோர்கள் கூறியுள்ளனர். அவர்கள் நமக்கு நன்மை பயக்காததை நமக்கு எடுத்துரைப்பதில்லை. நல்வழியினின்றும் பிசகிச் சென்றால் அவனுக்கு அழிவு ஏற்படும் என்று மறையறிந்தவர் கூறுகின்றனர். தேவர்களுக்கு தீங்கு இழைக்கும் அரக்கர்களுடன் கூடி அவர்களுக்கு உதவி செய்கின்றாய். இதனால் சினந்த பரமன் உலகமயமான இரதத்தில் ஏறி உன்னை அழிக்க வந்து கொண்டிருக்கின்றார். அதனால் இப்பொழுதே அவரைச் சரணடைந்து வழிபடுவாயாக.

      நாரதமுனிவர் புறப்பட்டுச் சென்றபின்னர், தேவர்களை அழித்து தேவலோகத்தையும் தான் நுகர விரும்பிய மயன் தன் படைவீரகளை போருக்கு ஆயுத்தம் செய்தான். தான் முப்புரத்தின் உட்புறம் அடைந்து மனத்தால் சிவனாரை போற்றிப் பணிந்தான். இதற்கிடையில் முப்புரம் சென்று திரும்பிய நாரதர் இலாவ்ருதவர்ஷம் என்னும் இடத்தில் தேவர்களைக் கண்டு முப்புரத்தில் தான் கண்டதை விவரித்தார். தேவர்களை ஊக்குவித்த பரமன் இந்திரன் முதலானவருடன் போருக்குப் புறப்பட்டார். அவர்கள் படை செல்லும் பொழுது எழுந்த ஒலியினால் கவரப்பட்ட அரக்கர்கள் அவர்களை வியப்புடன் நோக்கி பலவிதமான ஒலிகளையும் எழுப்பிக் கொண்டு தாக்க முற்பட்டனர். அவர்களிடையே கடும்போர் மூளவும், நந்தி, பரமன் கொடுத்த வஜ்ராயுதத்தால் வித்யுந்மாலியை அடிக்க அவன் வேரற்ற மரம்போல் கீழே விழுந்தான். இந்தத் துயர்மிக்க செய்தியைக் கேட்ட தாரகாக்ஷன் மிகவும் உக்கிரமாகத் தாக்கி பல கணங்களை வீழ்த்தினான். மயனும் பலவிதமாக சிந்தனை செய்தான்: – ‘காலமே மிகவும் பலமுள்ளது. காலம் நல்ல படி இருந்தால் எல்லாம் நன்கு கை கூடி வரும்.’

      தன் மாயையின் பலத்தினால் ஒரு மாபெரும் கிணற்றைக் தோற்றுவித்து அதன் நீரை வித்யுந்மாலியின் மீது தெளிக்க அவனும் கட்டைகளினால் வளர்ந்து கொழுந்து விட்டெரியும் நெருப்பைப் போன்று எழுந்து வந்தான். மிக்க மகிழ்ச்சி அடைந்த மயனும் அவனை அணைத்துக்கொண்டு கொண்டாடினான். மிக்க உற்சாகத்துடன் பேரி முதலானவை முழங்கவும் அரக்கர்களும் போருக்குக் கிளம்பினார். நந்தி கேசுவரன் அடித்து வீழ்த்திய அரக்கர் மயன் ஏற்படுத்திய கிணற்று நீரினால் புத்துயிர் பெற்று எழுந்து போரிட்டனர். அப்பொழுது அரக்கருடன் போராடி உள்ளே நுழைந்த திருமால் அந்த கிணற்று நீர் அனைத்தையும் குடித்து விட்டார். தோல்வியடைந்த அரக்கர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர். அந்த மாயக்கிணற்று நீர் குடிக்கப்பட்டு கிணறு வற்றிவிட்ட செய்தியை அறிந்த மயன் தான் தோல்வியடையும் அறிகுறி அது என்று உணர்ந்து தன் வீரர்களை ஊக்குவித்து பிரமத கணங்களின் உறைவிடமான ஸாகரத்தை நோக்கி தன் முப்புரங்களையும் செலுத்தினான். அப்பொழுது அரக்கர் படைக்கும் தேவர்களுக்குமிடையே கடும்போர் மூண்டது. அப்பொழுது சிவனார் அம்பு எய்து முப்புரத்தையும் ஒரே ஸமயத்தில் தாக்கினார். அந்த நெருப்பினால் தாக்கப்பட்ட மாளிகைகள், கட்டிங்கள் முதலான அனைத்தும் கொழுந்துவிட்டு எரிந்தன.

தாரகனின் பிறப்பும் அவன் அழிந்த வரலாறும்:

      நான்முகனின் மனத்தால் படைக்கப்பட்டவன் தக்ஷபிரஜாபதி என்பவன். அவனுக்குத் தன் மனைவியான வைரிணியின் மூலம் அறுபது பெண் குழந்தைகள் பிறந்தன. அவர்களில் முறையே பத்து பேர்களை தருமனுக்கும், பதின்மூன்றை கச்யபருக்கும், இருபத்தேழு பேரை ஸோமனுக்கும், நால்வரை அரிஷ்டநேமிக்கும், இருவரை பாஹுகபுத்திரனுக்கும் (பஹுபுத்திரனுக்கும்) இருவரை ஆங்கிரஸ்ஸுக்கும். இருவரை கிருசாச்வருக்கும் மணம் செய்வித்தான். இவர்களில் கச்யபரின் மனைவியான அதிதிக்குப் பிறந்தவர்கள் இந்திரன் உபேந்திரன் முதலான தேவர்கள், திதிக்குப் பிறந்தவர்கள் ஹிரண்யகசிபு முதலான அரக்கர்கள்.

      மக்களைத் துன்புறுத்திய ஹிரண்யகசிபுவை திருமாலும் மற்ற அரக்கர்களை இந்திரனும் கொல்லவே, திதியும் தன் கணவனிடம் இந்திரனை வெல்லும் வலிமையுடைய ஒரு மகவுக்காக வேண்டினான். அவரும் அவளை நியமங்களுடன் இருக்கக் கூறி ஒரு மகவு பிறக்கும் என்றருளினார். அவளும் இந்திரனைக் கொல்ல பிறக்கப் போகும் மகவை நினைத்து மிகவும் கவனத்துடன் நியமங்களை கடைப்பிடித்து வந்தாள். அவளை அண்டிய இந்திரன் செய்து வந்த பணிவிடைகளை ஏற்றாள். விரதம் முடிய இன்னும் பத்து ஆண்டுகள் உள்ள போது தனக்குப் பிறக்கப் போகும் மகவுடன் தன் செல்வச் சிறப்பு அனைத்தையும் பகிர்ந்து நுகருமாறு இந்திரனை வேண்டி பின் துயிலுற்றாள். அப்பொழுது அவள் கால்கள் சுத்தம் செய்யாது துயிலுற்றதினால் இதற்காகவே காத்திருந்த இந்திரன் அவள் கர்ப்பத்தில் புகுந்து அந்த கர்ப்பத்தை நாற்பத்தொன்பது துண்டுகளாகச் செய்தான். அப்பொழுது அவள் விழித்தெழ, மிகவும் பணிவுடன் அவள் முன் நின்று தான் அவள் கர்ப்பத்திற்கிழைத்த தீங்கை எடுத்துக் கூறி அதற்கு மாற்றாக நாற்பத்தொன்பது பேருக்கும் தேவலோகத்தில் உகந்த இடம் தருவதாகக்கூறவும் அவளும் அதற்கிசைந்தான். மீண்டும் தன் கணவனை அழைத்து அஸ்திரசஸ்திரங்களால் அழிக்க முடியாத மகனை வேண்டினாள். அவரும் பத்தாயிரம் ஆண்டு தவமியற்றி ஒரு மகனை பெறுவாள் என்றும் அவன் பிளக்க முடியாத வஜ்ரம் போன்ற உடலைப் பெற்று அதனால் வஜ்ராங்கன் என்ற பெயருடன் விளங்குவான் என்றும் கூறினார். அவ்வாறே அவள் தவமியற்ற அனைத்து அஸ்திரங்களிலும் தேர்ச்சி பெற்றவனாகவும் மிகவும் வலிமை உடைய உடலுடன் கூடியவனாகவும் வஜ்ரங்கன் பிறந்தான். பிறந்த உடனேயே தான் என்ன செய்ய வேண்டுமென அன்னையை வினவ அவளும் தன் மகவு அனைத்தையும் கொன்ற இந்திரனைப் பழிவாங்க அவனைக் கொல்ல வேண்டுமெனக் கூறினாள். அன்னை சொற்படு புறப்பட்டு வஜ்ராங்கனும் விண்ணுலகை அடைந்து இந்திரனைக்கட்டி தன் தாயின் முன்னர் கொணர்ந்து நிறுத்தினான். இதற்கிடையில் நடந்ததை அறிந்த நான்முகனும் கச்யபடும் அவ்விடத்தை அடைந்தனர். நான்முகன் வஜ்ராங்கனிடம் ஒருவனுக்கு அவமானமே அவனைக் கொன்றது போன்றாகும். அதனால் இந்திரனை விட்டுவிடு என்று கூறினார். அவனும் தன் தாயின் சொற்படி தான் நடந்ததாகவும். இப்பொழுது தன் பாட்டனார் சொற்படி இந்திரனை விட்டுவிடுவதாகவும் கூறினான். நான்முகன் வராங்கனை என்னும் பெண்ணைப் படைத்து அவனுக்களித்தார். அவளுடன் வனம் சென்ற வஜ்ராங்கன் பஞ்சாக்னியின் மத்தியில் உயர்த்திய கைகளுடன் நின்று உணவின்றி ஆயிரம் ஆண்டுகள் கடுந்தவமியற்றினான். பின்னர் ஆயிரம் ஆண்டுகள் நீரில் நின்று கடுந்தவமியற்றினான். அவன் தவத்தைக் கலைக்க இந்திரன் செய்த முயற்சிகள் யாவும் பயனற்றுப் போயின. கடைசியில் நான்முகன் அவன் முன் தோன்றி அவன் வேண்டும் வரமனைத்தும் கொடுக்க சித்தமாய் நின்றார். அவனும் தனக்கு அஸுரத்தன்மை ஒருபொழுதும் வேண்டாமென்றும், தவத்திலேயே ஈடுபாடு இருக்க வேண்டும் என்றும் வேண்டினான். நான்முகனும் அவ்வாறே ஆகட்டும் என்று கூறி மறைந்தார். உணவு அருந்த தன் மனைவியைத்தேடவும் அவளைக் காணாது கடைசியில் மலைக்குகையில் அழுது கொண்டிருக்கும் அவளைக் கண்டான். பின்னர் தேவேந்திரன் அவளை அடித்துத் துன்புறுத்தினான் என்றறிந்தான். தன்னுயிர் துறக்க எண்ணிய அவள் தன்னைக் காக்க தனக்கொரு மகனைக் கொடுக்குமாறு அவனை வேண்டினான். அதன் பொருட்டு மீண்டும் தவமியற்ற எண்ணின வஜ்ராங்கனைத் தடுத்த நான்முகன் தவமியற்றாமலேயே அவன் எண்ணம் கைகூடும் என்றும், தாரகன் என்னும் மகன் பிறப்பான் என்றும் கூறி அருளினார். (தாரக என்னும் சொல்லிற்கு காப்பவன் என்று பொருளாரும்). அவ்வண்ணமே ஆயிரம் ஆண்டுகள் கர்ப்பம் தரித்து வராங்கனை ஒரு மகனை ஈன்றெடுத்தாள். அவன் பிறந்த உடன் உலகமே ஆட்டமுற்றது. அவனை அஸுரர் தம் தலைவனாக்கினார்.

      அரக்கரனை வரையும் கூப்பிட்ட அவன் தேவர்களுக்கும் தமக்குமிருக்கும் தீராப்பகையை எடுத்துரைத்து தேவர்களை தவத்தின் வலிமையின் பயனால் தான் வெல்ல வேண்டுமென்று கூறி, பாரியாத்ர மலைத் தொடரை அடைந்து, உணவின்றி பஞ்சாக்னியின் மத்தியில் கடுந்தவம் இயற்றி தன் உடலினின்று தினமும் மாம்ஸத்தை எடுத்து அக்னிக்கு அளித்து வந்தான். அவன் தவத்தினால் உலகமனைத்தும் தஹிக்கப்படும் அவன்முன் தோன்றிய நான்முகன் தன் மனமகிழ்ச்சியைத் தெரிவித்து அவன் வேண்டும் வரம் தர சித்தமாய் நின்றார். அவன் தனக்கு எவ்வுயிரினின்றும் எந்த ஆயுதத்தாலும் மரணம் ஏற்படக்கூடாதென்று வரம் கேட்டான். ஆனால் நான்முகன் உலகில் பிறந்த யாவரும் இறக்க வேண்டியவரே என்றும் அதனால் இறப்பில்லா வரம் தர இயலாதெனக் கூறினார். பின்னர் தாரகன் பிறந்து ஏழு நாட்களே ஆன பாலகனால் தனக்கு மரணம் ஏற்படவேண்டுமென்று வேண்டினான். நான்முகனும் அவ்வாறே ஆகட்டும் என்று வரமருளினார்.

      அனைவரும் அவனுக்குப் பணி செய்ய அவன் தன் குறிக்கோள் தன் தாயின் துயர் துடைப்பதே என்று கூறி, இந்திரனை வெல்ல எண்ணி போருக்கு ஆயத்தம் செய்தான். பெரும் தானவர் படை தம்மைத்தாக்க வருவதை வாயுவின் மூலம் அறிந்த இந்திரன் தேவகுருவுடன் ஆலோசனை செய்து அவர்களுடன் போர் செய்வதற்கு ஏற்பாடுசெய்யுமாறு கட்டளை இட்டான். இருவர் படைகளுக்குமிடையே கடும்போர் மூண்டது. போரின் முடிவில் தோல்வியுற்ற தேவர்கள் நான்முகனை அடைய அவரும் தாரகன் தவத்தால் பெற்றுள்ள வரத்தை எடுத்துரைத்து அவனைக் கொல்ல பாலகன் சிவனார் மூலம் பிறக்கவேண்டுமென்று கூறினார். சிவன் பார்வதி இவ்விருவரிடையே பிணக்கம் ஏற்பட தன்னின்றும் முன்னர் தோன்றியநிசையை பணிந்தார் நான்முகன். பின்னர் இந்திரன் கூற்றுப்படி நாரதமுனிவர் இமவானை அடைந்தார். இமவானும் அவரை வரவேற்ற பின்னர் தன் மகளை அவரை வணங்கச் செய்தான். மேனை அவளுக்கு எவ்விதமான கணவன் வாய்ப்பான் என்றறிய ஆவல் கொண்டாள். நாரதமுனி வரும் அவளுக்குக் கணவன் பிறக்கவில்லை என்றும் லக்ஷணங்களும் அற்றவன் என்றும் கூறும்பொழுதே கணவன் மனைவி இருவருமே பெரிதும் வருந்தினர். அப்பொழுது நாரதர் அந்தப் பரமன் பிறப்பற்றவர் என்றும், நான்முகன் முதலான மற்றவர் பிறப்பு, இறப்பு, மூப்பு முதலியன உடையவர் என்றும் கூறி பார்வதியின் சிறப்பான லக்ஷணங்களின் வரப்போகும் மேன்மையான பலன்களை எடுத்துரைத்தார். பின்னர் இந்திரனை அடைந்தார். இந்திரனும் காமனை வரவழைத்து தவம் செய்யும் சிவனாரின் மனத்தில் கிளர்ச்சி உண்டாக்கி பணிவிடை செய்யும் பார்வதிமீது மனம் லயிக்குமாறு செய்ய ஊக்குவித்தான். தக்க காரணமின்றி தன் மனம் சஞ்சலம் அடைவதற்குக் காரணம் காமனே என்று அறிந்த சிவனார் சினம் கொள்ள அவர் நெற்றிக்கண்ணினின்றும் எழுந்த பொறி காமனைச் சாம்பலாக்கியது. நடந்ததை அறிந்த ரதியும் மிக்க துயரத்துடன் கண்ணீர் விட்டுக் கதறினாள். பின்னர் வசந்தனால் தேற்றப்பட்டு சிவனாரைப் பணிந்து பின்வருமாறு அவரை துதித்தாள்:

நம: சிவாயாஸ்து நிராமயாய நம: சிவாயாஸ்து மனோமயாய |
நம: சிவாயாஸ்து ஸுரார்ச்சிநாய துப்யம் ஸதா பக்தக்ருபாபராய ||

நமோ பவாயாஸ்து பவோத்பவாய நமோ()ஸ்து த்வஸ்த மனோபவாய |     
நமோ ()ஸ்து தே கூடமஹாவ்ரதாய நமோஅஸ்து மாயா கஹனாச்ரயாய ||

நமோ()ஸ்து சர்வாய நம: சிவாய நமோ()ஸ்து ஸித்தாய புராதனாய |
நமோ()ஸ்து காலாய நம: கலாய நமோ()ஸ்து தே ஞானவரப்ரதாய ||

நமோ()ஸ்து தே காலகலாதிகாய நமோ நிஸர்காமல பூஷணாய |
நமோ()ஸ்த்வமேயாந்தகமர்தகாய நம: சரண்யாய நமோ ()குணாய ||

நமோ()ஸ்து தே பீமகணானுகாய நமோ()ஸ்து நாநா புவனாதிகர்த்ரே |
நமோ()ஸ்து நாநாஜகதாம் விதாத்ரே நமோ()ஸ்து தே சித்ரபலப்ரயோக்த்ரே ||

ஸர்வாவஸானே ஹ்யவிநாசநேத்ரே நமோ()ஸ்து சித்ராத்வரபாக போக்த்ரே |
நமோ()ஸ்து பக்தாபிமதப்ரதாத்ரே நம: ஸதா தே பவஸங்கஹர்த்ரே ||

அனந்தரூபாய ஸதைவ துப்யமஸஹ்ய கோபாய நமோ()ஸ்து துப்யம் |
சசாங்கசிஹ்னாய ஸதைவ துப்யமமேயமானாய நம: ஸ்துதாய ||

வ்ருஷேந்த்ரயானாய புராந்தகாய நம: ப்ரஸித்தாய மஹெளஷதாய |
நமோ()ஸ்து பக்த்யாபிமதப்ரதாய நமோ()ஸ்து ஸர்வார்த்திஹராய துப்யம் ||

      இவ்வாறு துதித்த ரதியின்பால் கருணை கொண்ட பரமன் அவளுடைய கணவன் உலகில்அனங்கன்என்ற பெயருடன் விளங்குவான் என்று கூறி மறைந்தார். பெரும் துயரத்துடன் கூடிநின்ற ரதியைக்கண்டு தேற்றிய இமவான் அவளைத் தன் இருப்பிடம் அழைத்துச் செல்ல நினைத்த பொழுது இமவானின் மகள் தன்னுடைய நற்பேறற்ற உடலினால் என்ன இன்பம் என்று கருதி தவத்தினால் உடலை வற்றச் செய்தாலும் மேலானது எனத் துணிவு கொண்டாள். உமா (! பெண்ணே வேண்டாம்) என்று அன்னை கூறிய இரு எழுத்துக்கள்உமாஎன்று அவளுடைய பெயராகவே அமைந்துவிட்டன. தன் எண்ணப்படியே அவள் மிக்க உறுதியுடன் பரமனை அடையக் கடுந்தவம் மேற் கொண்டாள். உலகில் அனைத்து உயிரினங்களும் அத்தவத்தினால் அல்லல்படவே இந்திரன் ஏழு மாமுனிவர்களையும் (ஸப்தரிஷிகள்) அழைத்து அவளது நோக்கம் அறிந்து வர வேண்டினான். அவர்களும் உமையுடன் பேசி அவளது நோக்கத்தை அறிந்து பரமனை அடைந்து உமையின் மேன்மையை எடுத்துக் கூறிப் பின்னர் இமவானை அடைந்து பரமன் அவரது மகளை மணம் புரிய விரும்புகிறார் என்று கூறினார். பின்னர் முனிவர்கள் உமையை அடைந்து மறுநாள் சிவனாருடன் அவளுக்குத் திருமணம் நடக்கப் போகிறதென்று கூறி அவளை வீட்டிற்குச் செல்லுமாறு பணித்தனர். பின்னர் அவ்விருவருக்கும் முறைப்படி திருமணம் நடந்தது.

      ஒரு ஸமயம் பார்வதி வாசனை எண்ணை தேய்த்துக் குளிக்கும் பொழுது அந்த நீரினின்றும் தோன்றினான் ஒரு பாலகன். விளையாடிக் கொண்டிருந்த அந்த பாலகனை தேவி நீரில் தள்ளிவிட அந்தப் பாலகன் நல்ல வலிமையுடன் கூடிய பருத்த உடலைப் பெற்றான். அவனைகாங்கயேஎன்றும் பின்னர்கஜாநநர்என்றும் தேவர்கள் போற்றினர்.

      பின்னர் கணங்களைக் குறித்து சிவ பார்வதி இவ்விருவரிடையே பிணக்கம் ஏற்பட அதை வீரகன் என்றும் கணம் தீர்த்து வைத்தான். பின்னர் தன் இல்லத்தில் நுழைந்த பார்வதியுடன் சிவனார் பலகாலம் இன்பமாகக் காலம் கழித்தனர். ஓராயிரம் ஆண்டுகல் கழிந்த பின் என்ன நடந்தது என்றறிய ஆவல் கொண்ட தேவர்கள் ‘அக்னிதேவனை’ அனுப்பினர் அவனும் ஒரு கிளிவடிவாகச் சென்று பரமன் தேவியுடன் இன்புற்றிருப்பதைக் கண்டான். இம்மாதிரி தன் இச்சையில் இடையூறு செய்ததின் பலனாக தனது வீர்யம் உடனேயே அக்னிதேவனை அடையும் என்று சபித்தார். அக்னிதேவனும் அதை பணிவுடன் ஏற்றுக் குடித்தான். இது மற்ற தேவர்களிடமும் அவரவர் உடலுக்கேற்ப பரவி நின்று பின்னர் வெளியேறி பொன்நிறத்தில் ஒரு பெரும் குளமாக மாறியது. பின்னர் அதைக் கேள்வியுற்ற பார்வதியும் அந்நீரில் விளையாடி அதன் கரை மீதமர்ந்து அந்நீரைப் பருக நினைக்கையில் அவள் அந்நீரில் நீராடி வரும் ஆறு கிருத்திகை பெண்டிரையும் கண்டாள். அப்பொழுது அவர்கள் பார்வதியிடம் தாங்கள் தாமரை இலையில் கொணரும் நீரைப் பருக ஏற்படும் மகவுக்கு தாமும் தாயாவோம் என்று கூறி அந்தக் குழந்தைக்கு தம்முடைய பெயரும் இடப்படட்டும் என்று கேட்டுக் கொண்டரன். அவ்வண்ணமே அந்நீரைப் பார்வதி பருகவும் அவள் வயிற்றினின்றும் சித்திரைமாதம் அமாவாசையில் பாலகன் பிறந்தான். அவன் கதிரவனின் ஒளியுடனும், ஆறு தலைகளுடன் கூடியவனாகவும் இருந்தான். அவனுக்கு சாகன், விசாகன், ஆறுமுகத்தோன், ஸ்கந்தன் (பிளந்து கொண்டு வந்ததினால்,) கார்த்திகேயன் என்ற பெயர்கள் ஏற்பட்டன. சித்திரை மாதம் வளர்பிறை ஷஷ்டி திதியில் இந்திரன் அவனை தேவர் படைத்தலைவனாக்கினான், இந்திரன் தேவஸேனை என்னும் தன் மகளை ஸ்கந்தனுக்கு மணம் செய்வித்தான். தேவர்கள் ஒவ்வொரு வௌம் தம் சிறப்பான ஆயுதங்களையும் சக்திகளையும் கொடுத்து பின்வருமாறு போற்றினர்.
நம: குமாராய மஹாப்ரபாய ஸ்கந்தாய ச ஸ்கந்திததானவாய |
நவார்க்க வித்யுத் த்யுதயே நமோ()ஸ்து தே ஷண்முக காமரூப ||

பிநத்த நாநாபரணாய பர்த்ரே நமோ ரணேதாருணதாருணாய |
நமோ()ஸ்து தே()ர்க்கப்ரதிமப்ரபாய நமோ()ஸ்து குஹ்யாய குஹாய
                                                                      துப்யம் ||

நமோ()ஸ்து த்ரைலோக்யபயாபஹாய நமோ()ஸ்து தே பாலக்ருபாபராய |
நமோ விசாலாமலலோசனாய நமோ விசாகாய மஹாவ்ரதாய ||

நமோ நமஸ்தே()ஸ்து மனோஹராய நமோ நமஸ்தே()ஸ்து ரணோத்கடாய |நமோ மயூரோஜ்ஜ்வல வாஹனாய நமோ()ஸ்து கேயூரசராய துப்யம் ||

நமோ த்ருதோதக்ர பதாகினே நமோ நம: ப்ரபாவப்ரணதாய தே()ஸ்து |
நமோ நமஸ்தே வரவீர்ய சாலினே க்ரியாபராணாம் பவபவ்ய மூர்த்தயே ||

      அவர்கள் துதியைக் கேட்ட குமரன் தான் அவர்களுக்கு என்ன செய்ய வேண்டுமென்று கேட்க அவர்களும் தாரகன் என்னும் அரக்கனால் தாம் அனைவரும் அல்லல் படுவதை எடுத்துரைத்து அவனைக் கொல்லுமாறு வேண்டினர். குமரனும் அவனைக் கொல்வதாக வாக்களித்தான். இந்திரனும் தூதன் ஒருவனை அனுப்பி தாரகன் ஆளும் உலகம் முழுவதும் தனது ஆட்சிமைக்குட்பட்டது என்று கூறச்செய்யவும் அதனால் வெகுண்டபோதிலும் தாரகன் பன்முறை தம்மிடம் தோற்ற இந்திரன் இப்பொழுது தம்மை துணிவுடன் எதிர்ப்பதற்குக் காரணம் புதிய உதவி ஏதோ கிடைக்கப் பெற்றிருப்பதே என்று என்னும் பொழுதே தேவபாடகர்கள் பாடிய பின்வரும் காதையைக் கேட்டான்.

ஜய அதுலசக்திதீதிதி பிஞ்ஜர!
புஜதண்ட சண்டரபஸ! ஸுகத! குமுதகாளன விகாஸ –
நேந்தோ! குமார! ஜய திதிஜகுல மஹோததி வடவாநல!
ஷண்முக! மதுரரவம்யூரரத! ஸுரமுகுடகோடி கட்டித –
சரண நவங்குர மஹாஸன! ஜய லலிதசூடாகலப நவவிமல
தல! கமலகாந்த! தைத்யவம்ச துஸ்ஸஹதாவாநல!
ஜய விசாக! விபோ! ஜய ஸகலலோகதாரக! ஸ்கந்த!
ஜய கெளரீநந்தன! கண்டாப்ரியப்ரிய! விசாக! விபோ!
த்ருத பதாகப்ரகீர்ணபடல! கனகபூஷணபாஸுரதினகரச்சாய!
ஜய ஜனித ஸம்ப்ரம லீலாலூனாகிலாராதே!
ஜய ஸகலலோகதாரக! திதிஜாஸுரவரதாரகாந்தக!
ஸ்கந்த! ஜய பால! ஸப்தவாஸர! ஜய புவனாவலிசோக விநாசந!

      இதைக் கேட்ட தாரகன் முன்னர் பாலகன் ஒருவனால் அவனுக்கு மரணம் ஏற்படும் என்று நான்முகன் கூறியது நினைவுக்கு வந்தவனாய் மனம் வருந்தினும் தன் படைவீரர்களை போருக்கு ஆயத்தம் செய்தான். பாலகன் என்று தாரகன் இளப்பமாகப் பேசக் குமரனும் தக்க பதில் அளித்தான். சிவ காலம் கடும்போர் நடந்த பின்னர் முடிவில் குமரன் தன் சக்த்யாயுதத்தை எறிந்து தாரகனின் மார்பைப் பிளந்தான்.
[குறிப்பு: இவ்வரலாறு பிரசித்தமான ஸ்காந்த புராணத்துடன் மாறுபடுகிறது. இது கல்ப பேதங்களினால் ஏற்பட்ட மாறுபாடு போலும்!]

பாணனின் முப்புரத்தை பரமன் எரித்த வரலாறு

      நர்மதை ஆற்றின் கரையில் ஜ்வாலேச்வரம் என்னும் ஒரு மேன்மையான தீர்த்தம் உள்ளது. அதன் மேன்மையைப் பின்வரும் கதை விவரிக்கின்றது.

      பாணன் என்னும் கொடிய அரக்கன் முப்புரத்தில் நின்று வானில் விரைந்து சென்று தேவர் முதலானவரைத் துன்புறுத்தி வந்தான். முனிவர்கள் சிவனாரைப் பணிந்து தம் துயர் துடைக்க வேண்டினர். சிவனாரும் அவர்களைத் தேற்றி நாரதமுனிவரை வரவழைத்து பாணனின் நகரத்தை அடைந்து அங்குள்ள பெண்டிரை தரும வழியினின்றும் வழுவும் வண்ணம் செய்து பாண பட்டிணத்தில் நுழைவதற்கு வழிசெய்தார். நர்மதை ஆற்றின் கரையை அடைந்த பரமன் முப்புரத்தை அழிக்க மனம் கொண்டார். மந்தரமலையை காண்டீவமாகவும், வாஸுகியை நாணாகவும், விசாகமென்னும் விண்மீனை தன் இருக்கையாகவும், திருமாலைச் சிறந்த அம்பாகவும், அம்பின் நுனியில் நெருப்பையும், முகத்தில் வாயுவையும், நான்கு மறைகளையும் நான்கு குதிரைகளாகவும் அச்வினீ குமாரர்களை கடிவாளங்களாகவும், இந்திரனையே அச்சாகவும், தோரணத்தில் குபேரனையும், வலது இடது புஜங்களில் யமனையும், காலனையும், சக்கரத்தில் அமரர்களையும், நான்முகனைத் தேர்ப்பாகனாகவும் உடைய தெய்வமயமான தேரின் மீதேறி மலை போன்று மூன்றுபுரங்களும் ஒருங்கே வர ஒரே அம்பினால் முப்புரங்களையும் பிளந்தார். அப்பொழுது அக்னிதேவன் அப்பட்டணத்தின் மாளிகைகள், நந்தனம் முதலிய அனைத்தையும் எரிக்க, பாணன் தான் வழிபட்டுவந்த லிங்கத்திற்கு ஊறு நேரக்கூடாதென வேண்டி பரமனைப் பின்வருமாறு தோடகவிருத்தத்தில் துதித்தான்.

சிவ சங்கர சர்வஹராய நமோ பவ பீம மஹேச்வர சர்வ நமோ |
குஸுமாயுத தேஹவிநாசகர த்ரிபுராந்தக அந்தகசூலதர ||

ப்ரமதாப்ரிய காந்த விபக்த நம: ஸஸுராஸுர ஸித்த கணைர்நமித |
ஹயவானரஸித்த கஜேந்த்ர முகாததி பாஸ்வததீர்க்க – விசாலமுக ||

உபலப்துமசக்யதரை ரமரைரஸுரை: ப்ரதிதோ()ஸ்மி ச பாஹுசதை: |
ப்ரணதோ()ஸ்மி பவம் பவபக்திரதோ சலசந்த்ரகலாகுல – தேவ நம: ||

ந ச புத்ரகலத்ரஹயாதி தனம் மம து த்வதனுஸ்மரணம் சரணம் |
வ்யதிதோ()ஸ்மி து பாஹுசதைர்பஹுபிர்கமிதா ச மஹா நரகஸ்ய கதி: ||

ந நிவர்த்ததி ஜன்ம ந பாபமதி: சுசிகர்மநிபத்தமபி த்யஜதி |
அனுகம்பதி விப்ரமதி ஸதி மம சைவ குகர்ம நிவாரயதி ||

      அவனுக்கு ஆறுதல் கூறி அவன் இறப்பற்று என்றுமே பொன் கோளத்தில் உலவட்டும் என்று வரமளித்தார். முப்புரம் எரிந்த பொழுது ஒரு பகுதி ஶ்ரீ சைலத்தில் (இது ஆந்திர நாட்டில் உள்ள ஶ்ரீ சைலமல்ல. இது நர்மதை ஆறு பாயும் வழியில் உள்ள மலைப்பகுதியாகும்) திரிபுராந்தகத்திலும் இரண்டாம் பகுதி அதே மலையில் அமரகண்டகத்திலும் விழுந்தன. எரிந்து விழுந்ததினால் ஜ்வாலேச்வரம் என்றழைக்கப்பட்டது.

      குறிப்பு: இந்த வரலாறு தாரகாக்ஷன் முதலான மூவரின் முப்புரத்தை பரமன் எரித்த வரலாற்றைப் போலவே உள்ளது.

நர்மதை நதிக்கரையில் ப்ருகுதீர்த்தத்தின் மேன்மை

      ப்ருகு என்றொரு மாமுனிவர் இருந்தார். அவரொரு ஸமயம் சிவனாரைக் குறித்துத் தவமியற்றினார். தன் கணவர் வாயிலாக அறிந்த அன்னையும் நகைத்து அம்முனிவரின் சிகை புகை போன்று ஆயினும் அவருக்கு மனநிறைவு ஏற்படவில்லை என்று கூறினாள். அப்பொழுது சிவனார் அவருடைய சினத்தை தேவி அறியமாட்டாள் என்று கூறி ஒரு காளையைப் படைத்து அதன் மூலம் ஒரு புத்தைத்தோண்டச் செய்து அதில் அம்முனிவரைத் தள்ளச் செய்தார். அப்பொழுது யோகநிலையில் இருந்த அவர் அந்தக் காளை மாட்டை சபிக்க எண்ணினார். அப்பொழுது அந்தக் காளை மாடு விண்ணை அடைந்து பின்னர் சிவனாராகக் காட்சி தந்த பொழுது ப்ருகுமுனிவர் மரம்போல் விழுந்து வணங்கி பின்வருமாறு துதித்தார்:

பவாதீதோ புவனபதே ப்ரபோ! து விஜ்ஞாபயே கிஞ்சித் ||

த்வத்குண நிகரான் வக்தும் க: சக்தோ பவதி மானுஷோ நாம
வாஸுகிரபி ஹி கதாசித்வதனஸஹஸ்ரம் பவேத்யஸ்ய ||

பக்த்யா ததாபி சங்கர புவனபதே! த்வத்ஸுதோ முகர: |
வதத: க்ஷமஸ்வ பகவன்! ப்ரஸீத மே தவ சரணபதிதஸ்ய ||

ஸத்வம் ரஜஸ் தமஸ்த்வம் ஸ்தித்யுத்பத்யோர்விநாசனே தேவ |
த்வாம் முக்த்வா புவனபதே! புவனேச்வர நைவ தைவதம் கிஞ்சித் ||

யமநியம யஜ்ஞ தான வேதாப்யாஸாச்ச தாரணா யோக: |
த்வத்பக்தே: ஸர்வமிதம் நார்ஹதி ஹி கலாஸஹஸ்ராம்சம் ||

உச்சிஷ்ட ரஸரஸாயன கட்காஞ்ஜன பாதுகா விவர – ஸித்திர்வா |
சிஹ்னம் பவவ்ரதானாம் த்ருச்யதி சேஹ ஜன்மனி ப்ரகடம் ||

சாட்யேன நமதி யத்யபி ததாஸி த்வம் பூதிமிச்சதோ தேவ |
பக்திர் பவ பேதகரீ மோக்ஷாய விநிர்மிதா நாத ||

பரதார பரஸ்வரதம் பரபரிபவ துக்க சோகஸந்தப்தம் |
பரவதனவீக்ஷணபரம் பரமேச்வர! மாம் பரித்ராஹி ||

மித்யாபிமானதக்தம் க்ஷணபங்குர விபவ விலஸந்தம் |
க்ரூரம் குபத்யாபிமுகம் பதிதம் மாம் பாஹி தேவேச! ||

தீனே த்விஜகணஸார்த்தே பந்துஜனேனைவ தூஷிதா ஹ்யாசா |
த்ருஷ்ணா ததாபி சங்கர! கிம் முடம் மாம் விடம்பயதி ||

த்ருஷ்ணா ஹரஸ்வ சீக்ரம் லக்ஷ்மீ ப்ரதஸ்வ யாவதாஸினீம் நித்யம் |
சிந்தி மதமோஹபாசாநுத்தாரய மாம் மஹாதேவ ||

கருணாப்யுதயம் நாம ஸ்தோத்ரமிதம் ஸர்வஸித்திதம் திவ்யம் |
ய: படதி பக்தியுக்தஸ்தஸ்ய துஷ்யேத் ப்ருகோர்யதா சிவ: ||

      அவர் பக்தியினால் மகிழ்ந்த சிவனார் அவருக்கு இனி சினம் ஏற்படாது என்று அருளினார். ப்ருகு மாமுனிவருக்கு பரமன் அருளிய அவ்விடம் ப்ருகு தீர்த்தம் என்ற பெயருடன் மிகச்சிறப்புடன் விளங்குகின்றது.

திருப்பாற்கடல் கடைதலும் காலகூடமென்னும் கொடிய நஞ்சின் தோற்றமும்

தேவர்களும் அஸுரர்களும் ஒருங்கே திருப்பாற்கடலைக் கடைய அதனின்றும் சந்திரனும், இலக்குமியும், வெள்ளைக் குதிரையும், கெளஸ்துபமனியும், பாரிஜாதமும் தோன்றிய பின்னர் ஒரு கரும் புகை மண்டலம் வானளாவி நின்றது. அதை நுகர்ந்த தேவர்கள் நினைவிழந்தனர். பின்னர் நெருப்பு மண்டலம் வெளிவந்த பின் பலவிதமான உயிரினங்களும், நஞ்சுடைய உயிரினங்களும் தோன்றின. பின்னர் தோன்றிய அச்சுறுத்தம் கொடிய உருவைக்கண்டு அனைவரும் அஞ்சினர். மேலும் அதன் மூச்சுக் காற்றினால் திருமால், இந்திரன், தேவர்கள், அஸுரர்கள் யாவரும் தஹிக்கப்பட்டவர்களாக இருந்தனர். அப்பொழுது திருமால் பரபரப்புடன் அந்த உருவை யார் என்று வினவ, தான் காலகூட்டம் என்னும் நஞ்சு என்றும், ஒருவருடன் ஒருவர் சண்டை செய்யும் தேவர், அஸுரர் அனைவரையும் அழிப்பேன் என்றும் கூறியது. அதனால் அஞ்சிய அனைவரும் சிவனாரை அண்டி பின்வருமாறு போற்றினர்.

நமஸ்துப்யம் விருபாக்ஷ ஸர்வதோ ()னந்தச க்ஷுஷே |
நம: பினாகஹஸ்தாய வஜ்ரஹஸ்தாய தன்வினே ||

நமஸ்த்ரிசூலஹஸ்தாய தண்டஹஸ்தாய தூர்ஜடே |
நமஸ்த்ரைலோக்யநாதாய பூதக்ரமசரீரிணே ||

நம: ஸுராரிஹந்த்ரே ஸோமாக்ன்யர்காக்ர்ய சக்ஷுஷே |
ப்ரஹ்மணே சைவ ருத்ராய நமஸ்தே விஷ்ணுரூபிணே ||

ப்ரஹ்மணே வேதரூபாய நமஸ்தே தேவரூபிணே |
ஸாங்கிய யோகாய பூதானாம் நமஸ்தே சம்பவய தே ||

மன்மதாங்கவிநாசாய நம: காலக்ஷயங்கர |
ரம்ஹஸே தேவதேவாய நமஸ்தே ச ஸுரோத்தம ||

ஏகவீராய சர்வாய நம: பிங்ககபர்தினே |
உமாபர்த்ரே நமஸ்துப்யம் யஜ்ஞத்ரிபுரகாதினே ||

சுத்த போதப்ரபுத்தாய முக்த கைவல்யரூபிணே |
லோகத்ரய விதாத்ரே ச வருணேந்த்ராக்னிரூபிணே ||

ருக்யஜுஸ்ஸாம வேதாய புருஷாயேச்வராய ச |
அக்ர்யாய சைவ சோக்ராய விப்ராய ச்ருதிசக்ஷுஷே ||

ரஜஸே சைவ ஸத்வாய நமஸ்தே ஸ்திமிதாத்மனே |
அநித்ய நித்யபாவாய நமோ நித்யசராத்மனே ||

வ்யக்தாய சைவாவ்யக்தாய வ்யக்தாவ்யக்தாயவை நம: |
பக்தானாமார்த்திநாசாய ப்ரியநாராயணாய ச ||

உமாப்ரியாய சர்வாய நந்திவக்த்ரஞ்சிதாய ச |
ருதுமன்வந்த கல்பாய பக்ஷமாஸதினாத்மனே ||

நாநா ரூபாய முண்டாய வருதப்ருது தண்டினே |
நம: கமலஹஸ்தாய திக்வாஸாய சிகண்டினே ||

தன்வினே ரதினே சைவ யதயே ப்ரஹ்மசாரிணே |
இத்யேவமாதி சரிதை: ஸ்துதம் துப்யம் நமோ நம: ||

      இவ்வாறு துதித்து அவர்கள் அந்தக் கொடிய நஞ்சு அவர்கள் அனைவரையும் விழுங்கும் பேராபத்தினின்றும் தம்மைக் காத்தருள வேண்டினர். அந்த நச்சுப் பொருளை விழுங்கி அவர்களைக் காப்பதாக உறுதி அளித்தா பரமன் அவ்விதமே திருப்பாற்கடலை அடைந்து அந்த நஞ்சை தன் இடக்கரத்தால் எடுத்து உட்கொள்ள அது அவருடைய நெஞ்சில் தங்கி ஒரு அணிகலன் போல விளங்கியது.

சிவம்