Sunday, July 31, 2016

சிவமயம்
ஶ்ரீ மஹாதேவ ஜயம்
நாராயண பட்டதிரியின்
அஷ்டமீ பிரபந்தத்தினின்றும்
சிவ தண்டகம்
உரை: டாக்டர் . கங்காதரன் எம்.., எம்.லிட்., பிஹெச்.டி
ஸமஸ்க்ருத விரிவுரையாளர், சென்னை பல்கலைக்கழகம்

[சிவஞான பூஜா மலர்துந்துபி ஆண்டு - (1982)
பிரசுரம்: ஆங்கீரஸ S. வேங்கடேச சர்மா, மேலமாம்பலம், சென்னை – 600 033] 
      ஜய ஜய ஜகதேகநாத! பிரபோ! தேவதேவ! ப்ரஸீத த்ரிசூலின்! கபாலின்! பவாம்போதி மத்யே ஸதாபத்த கேதம் முஹுர்மஜ்ஜனோன்மஜ்ஜனைர் முஹ்யதே மஹ்யமாக ப்ரதேஹி ப்ரமோதேன தே பாதபங்கேருஹம் நாவமாவிர்தயம்! த்வத்பதாம்போருஹாதந்யதஸ்மாத்ருசாம் கிம் ஸமாலம்பனம் ஸாந்த்ரகாருண்யஸிந்தோர்! ஸதாமேக பந்தோ! ஜகத் – ஸ்ருஷ்டி – ரக்ஷா – விநாசைக – தீக்ஷா – துரீணா மரீணாமார்த்ர – காருண்ய – தாராஸுதா – தோரணீ – ஸாரணீம் பக்திபாஜாம் ஜநானாமஹந்தா – லதாகர்த்தரீம் ம்ருத்யு ஜன்மாதி – ஸந்தாப – வித்வமஸ – ஸித்தெளஷதிம் தேஹி துஷ்டாமிதோ த்ருஷ்டிமிஷ்டப்ரதாம் நெளமி நித்யம்.
      உலகமனைத்திலும் சிறந்த தெய்வமே! நீர் வெல்வீராக! பெருந்தலைவரே! வானவர்க்கும் தலைவரே! அருள்புரியுங்கள். திரிசூலம் தாங்கியவரே! மண்டை ஓட்டைத் தாங்கியவரே! பிறப்பு, இறப்பு என்னும் ஆழ்கடலின் நடுவில் எப்பொழுதும் கட்டுண்டு வருந்தி, மீண்டும் மீண்டும் மூழ்கி எழுவதால் மயக்கமுற்ற எனக்கு மிக்க மகிழ்ச்சியுடன் உம்முடைய பாதத் தாமரைகளை விரைவில் தாரும்! பாதத் தாமரைகளான படகினில் ஏறிவிட்டேன். உம் பாதத் தாமரையைத் தவிர்த்து எங்கள் போன்றவர்க்கு பிடிப்பு ஏது? அளவற்ற கருணைக்கடலே, நல்லவர்களுக்குச் சிறந்த உற்றவரே! உலகினைப் படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மேம்பட்ட கடமையில் சிறந்தவரின் வற்றாத நெகிழும் கருணை ஊற்றின் அமிர்தமயமான வெள்ளப் பெருக்கின் வாய்க்காலும் பக்தி பெருகும் மக்களின் அகந்தை என்னும் கொடியைக் களையும், மரணம், பிறப்பு முதலான துன்பங்களை அழிக்கும் அருமருந்தைக் கொடுங்கள். மகிழ்வுற்றதும் விரும்பியதை வழங்குவதுமான பார்வையை இப்பொழுதிலிருந்து எப்பொழுதும் வணங்குகின்றேன்.
      க்வசிச்சஞ்சதஞ்சஜ்ஜடாமண்டலீ ஹிண்டமான ஸ்புரத் ஸ்வஸ்ஸரிந்நிஸ்ஸரல்லோல – கல்லோல – ஹல்லோஹலத்வான நிர்தூதலோகம், க்வசிச்சாரு – தம்மில்ல – பாரோல்லஸந் மல்லிகாவல்லர் – நிர்யதாமோதஸம்பார – ஸம்ப்ராம்ய துத்தால – மத்தாவிஜங்கார – ச்ருங்காரிதாசாந்தராலம், க்வசிந்முண்டமாலாகணைர்மண்டிதம், குத்ரசித் புல்ல மெளல்யுத்கரைருல்லஸந்தம், க்வசித் பஸ்மபுண்ட்ரோல்ல ஸத்பாலதேசம், க்வசிந்நீலலோலாளகாளீ – ஸமுல்லாஸி வக்த்ராரவிந்தம், கவ்சித் பாலநேத்ரோ – ஜ்வலத்வீதி ஹோத்ரம், க்வசிச்சித்ர – கஸ்தூரிகா – சித்ரகாலங்க்ருதம் குத்ரசித் பக்த – த்ருஷ்ணா – லதா – கந்ததாத்ராயிதாரக்த நேத்ராஞ்சலம், குத்ரசித் வித்ரஸத் – பால – ஸாரங்க – யோஷிச் சலாபாங்க – பங்கீபிரங்கீக்ருதம், குத்ரசித் பூரிபூதிஸ்புரத் பாண்டுகண்டஸ்தலம், குத்ரசிச்சித்ரபத்ராங்குரைரங்கிதம், குத்ரசித் கர்ணபூஷாபதோத்பாஸித – ஸ்தூலகத்ரூஸுதம், க்வாபி கண்டஸ்கலத்குண்டலாலக்ன – ப்ரபாபாஸுரம், க்வாபி ச ஸ்பீத – வக்ஷஸ்தலாகுண்ட – பஸ்மாவகுண்டோ ஜ்வலம், க்வாபி சோத்துங்க – பீனஸ்தனாஸக்தகஸ்தூரிகா கர்தமம், குத்ரசில்லம்பமானாஸ்தி – மாலாகணம், க்வாபி சாமுக்தமுக்தாவலீ – பந்துரம், குத்ரசித் பஸ்மநா பாஸமா னோதரம், க்வாபி சாபீன – வக்ஷோருஹக்லாந்த புக்னாவலக்னம் க்வசித்வ்யாக்ர – சர்மாம்பராகம்ர – சோபம், க்வசிச்சாபி கம்பந்நிதம்பஸ்தலோத்யத் – தகூலாஞ்சலாபத்த – காஞ்சீ கலாபம், க்வசித்போகிவ்ருந்தஸ்புரத்பாதபத்மம், க்வசிந்மஞ்ஜுசிஞ்ஜானமஞ்ஜீரகாலங்க்ருதம் கோத்ரராஜாத்மஹா – காத்ர – மிச்ரீபவந்தம் பவந்தம் ஸதா மானஸே சீலயாம.
      ஓரிடத்தில் அசைகின்ற சுருண்ட சடையில் ஓடுகின்ற பொங்கும் தன் ஆற்றிலுள்ள அலைகளின் ஒலியினால் அசைக்கப்பட்ட உலகத்தை உடையவரும், ஓரிடத்தில் அழகிய கூந்தல் தாங்கும் ஒளிரும் மல்லிகைக் கொடியினின்று வரும் நறுமணப்பெருக்கினால் சுழலும் பெரும் குடிமயக்கம் கொண்ட வண்டுகளின் ரீங்காரத்தினால் கவர்ச்சியாக்கப்பட்ட திசைகளை உடையவரும், ஓரிடத்தில் முண்டமான உடல்களாலான மாலையையணிந்த பூதகணங்களால் சூழப்பட்டவரும், ஓரிடத்தில் தலைமீது மலர்ந்த அசோக மலர்களினால் விளங்குபவரும், ஓரிடத்தில் திருநீறு ஒளிரும் நெற்றிப் பகுதியை உடையவரும், ஓரிடத்தில் அசைந்தாடும் கருத்த கூந்தலில் வண்டுடன் ஒளிரும் முகத்தாமரையை உடையவரும் ஓரிடத்தில் நெற்றிக்கண்ணின்றும் ஜ்வலிக்கும் நெருப்பை உடையவரும், ஓரிடத்தில் பிரகாசிக்கும் கஸ்தூரியினாலான நெற்றிப் பொட்டினால் அலங்கரிக்கப்பட்டவரும், ஓரிடத்தில் தம் பக்தர்களின் ஆசை என்னும் கொடிச்சுழலைக்களைவதினால் சிவந்த கடைக்கண் பகுதியை உடையவரும், ஓரிடத்தில் பயந்த இளம்புள்ளிமானின் மிரண்டு கடைக்கண் பார்வைகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டவரும், ஓரிடத்தில் நிரம்ப திருநீறு ஒளிரும் வெளுத்த கழுத்துப்பகுதியை உடையவரும், ஓரிடத்தில் பிரகாசிக்கும் இலைத்துளிர்களின் குறியை உடையவரும், ஓரிடத்தில் காதணியாக ஒளிரும் பருத்த அரவத்தை உடையவரும், ஓரிடத்தில் கன்னத்தில் தொங்கும் குண்டலங்களிலுள்ள இரத்தினங்களின் ஒளியினால் விளங்குபவரும், மேலும் ஓரிடத்தில் பரந்த மார்பில் பரவிப் பூசப்பட்ட திருநீறுடன் ஒளிர்பவரும், ஓரிடத்தில் உயர்ந்த பருத்த ஸ்தனபாகத்தில் பூசப்பட்ட கஸ்தூதிக் குழம்பை உடையவரும், ஓரிடத்தில் தொங்கும் அஸ்தி மாலையின் தொகுப்பை உடையவரும், ஓரிடத்தில் அணியப்பட்ட முத்துமாலையுடன் விளங்குபவரும், ஓரிடத்தில் திருநீறினால் ஒளிரும் வயிற்றுப் பகுதியை உடையவரும், ஓரிடத்தில் பருத்த மார்பினால் சோர்வுற்று வளைந்த இடுப்பை உடையவரும், ஓரிடத்தில் புலித்தோலணிந்ததினால் அழகிய தோற்றத்தை உடையவரும், ஓரிடத்தில் உடலின் பின் பகுதியின் ஒளிரும் பட்டின் நுனியில் கட்டப்பட்டு சிறந்து விளங்கும் ஒட்டியாணத்தை உடையவரும், ஓரிடத்தில் அரவங்களின் கூட்டங்கள் துள்ளி விளங்கும் பாதத்தாமரைகளை உடையவரும், ஓரிடத்தில் கவர்ச்சியாக ஒலிக்கும் சதங்கையினால் அழகு செய்யப்பட்டவரும், மலையரசனின் மகளின் உடலுடன் ஒன்றிய வருமான உம்மை (எம்) மனத்தில் எப்பொழுதும் வழி படுகின்றோம்.
      ஸ்தா த்வத்பதாம்போருஹ – த்வந்த்வ – ஸம்ஸேவனாதந்ய தேகம் ந வாஞ்சாம்யஹம்; க்ருத்தி த்ருஷ்ணாலதாம்; சிந்தி ஸம்ஸாரபந்தம்; மனோவாகலப்யஸ்ரூபாய துப்யம் நம:; ஸச்சிதானந்தகந்தாய துப்யம் நம:; ஸர்வ – வேதாந்த ஸித்தாந்த – தத்வார்த்த – ஸார – ஸ்வரூபாய துப்யம் நம:; நித்ய சுத்த – ப்ரபுத்தாய துப்யம் நம:; ரஜ்ஜுஸர்பாபமேதத் ஸம்ஸ்தம் ப்ரபஞ்சம் ஸதா பச்யதாம் யோகபாஜாம் ஜனானாமிடா – பிங்கலா – நாடி – ஸந்நத்த – கம்பத்ஸும்னா – மஹா நாடி – மத்யே விசுத்தே ஸ்மாதெள ஸ்புடம் பாஸமானாய ஸம்வித்ப்ரகாசாய துப்யம் நம:; பாஹி பாஹி ப்ரபோ! மன்மதாரே! மஹாதேவ! சம்போ! க்ருபாம்போதிதே! ஹே ப்ரபோ! விச்வமூர்த்தே! நமஸ்தே நமஸ்தே நமஸ்தே (அ)ஸ்து சம்போ! நம: !
      எப்பொழுதும் உம்மிரு பாதத்தாமரைகளை வழிபடுவதைத் தவிர மற்றெதையும் நான் விரும்பவில்லை. ஆசைக் கொடியைக் கத்தரித்துவிடும் பிறப்பு, இறப்பு என்னும் பிணைப்பைக் களைந்துவிடும், மனத்தாலும் சொல்லாலும் அடையமுடியாத உருவமுடைய உமக்கு வணக்கங்கள். ஸத், சித், ஆனந்த வடிவமான உமக்கு வணக்கங்கள். அனைத்து வேதாந்த சித்தாந்த தத்துவப் பொருள்களின் ஸாரவடிவான உமக்கு வணக்கங்கள். எப்பொழுதும் தூய ஞானியான உமக்கு வணக்கங்கள் கயிறு ஒரு அரவம் போலத் தோற்றமளிக்கும் இந்த பிரபஞ்சமனைத்தையும் எப்பொழுதும் நோக்கும் மக்களுடைய இடை, பிங்களை என்னும் இவ்விரு நாடிகளால் சூழப்பட்டு ஒளிரும் ஸுஷும்னை என்னும் சிறந்த நாடியின் நடுவே தூயமான ஸமாதி நிலையில் துல்யமாகப் பிரகாசிக்கும் ஞானவடிவாய்த் திகழும் உமக்கு என் வணக்கங்கள். என்னைக் காத்திடும்! காத்திடும்! பிரபுவே! காமனின் பகைவரே! தெய்வங்களுள் சிறந்தவரே! செல்வத்தைக் கொடுப்பவரே! கருணைக்கடலே! ஓ! பிரபுவே! உலகவடிவானவரே! உமக்கு என்னுடைய வணக்கங்கள். ஓ! செல்வத்தைக் கொடுப்பவரே!
      [உரையாசிரியர் குறிப்பு: திருமாலின் மீது நாராயணீயம் என்னும் சிறந்த தோத்திரத்தைப் பாடி புகழ் பெற்ற மேல்புத்தூர் நாராயணபட்டர் திருமாலிடம் ஈடுபாடு கொண்டவர் என்றும் அதனால் அவர் தம் நூலில் மற்ற தெய்வங்களைக் குறைத்துக் கூறியிருக்கிறார் என்றொரு கருத்து நிலவுகிறது. அதற்கு மாறாக அவர் சிவனாரையும் சிறப்பாகப் பாடியதொரு நூல் இருக்கிறது என்று யாவரும் அறிய அவருடைய இந்த நூலை இங்கு மொழி பெயர்த்து தந்துள்ளேன். கேரளத்தில் வைக்கம் என்றதொரு புகழ் பெற்ற சிவத்தலம் உள்ளது. அங்கு ஒரு சிறந்த சிவாலயம் உள்ளது. அங்கு ஆண்டுதோறும் இருமுறை கார்த்திகை, மாசி இவ்விரு மாதங்களிலும் அஷ்டமி திதியில் திருவிழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவினை விவரித்து நாராயணபட்டர் ‘அஷ்டமீ சம்பூ’ அல்லது ‘வ்யாக்ராலயேசாஷ்டமீ மஹோத்வை சம்பூ’ என்னும் ஒரு சிறு நூலை இயற்றியுள்ளார். 40 செய்யுட்களும் 22 உரைநடைப் பகுதிகளும் உள்ள இந்நூலில் சிவனாரைப் போற்றும் தண்டகம் ஒன்றை அமைத்துள்ளார். இந்த தண்டகம் வடிவில் சிறிதே ஆயினும் அதன் சொல் நயமும் பொருள் நயமும் படிப்பவர் மனத்தைக் கவரவல்லது என்பதில் சிறிதும் ஐயமில்லை. தாம்பாடும் பொருளை அனைத்திலும் உயர்ந்ததாகக் கூறுவது கவிகளில் இயல்பு. அவ்வாறே இங்கும் சிவனாரை சிறப்பாகக் கொண்டாடும் சில்வ சொற்றொடர்கள் அமைந்துள்ளன. உதாரணமாக, ‘ஜகதேகநாத’, ‘த்வத்பதாம்போருஹாதன்ய – தஸ்மாத்ருசாம் கிம் ஸமாலம்பனம்’, ‘ஏகப்ந்தோ’. முதலியவற்றைக் கூறலாம். இந்த தண்டகத்தைப் படித்து இன்புற்று பரமனின் அருளுக்குப் பாத்திரமாவோம்.]

சிவம்.

Saturday, July 30, 2016

சிவமயம்
ஶ்ரீ மஹாதேவ ஜயம்

மஹாபாரதம் கூறும் ஸ்கந்த மஹிமை
(வனபர்வாவில் உள்ளது)
தர்ம பிரவசன ரத்னம், உத்தவ உபன்யாஸ சக்கரவர்த்தி
மஞ்சக்குடி கே. ராஜகோபால் சாஸ்திரிகள்

[சிவஞான பூஜா மலர்துந்துபி ஆண்டு - (1982)
பிரசுரம்: ஆங்கீரஸ S. வேங்கடேச சர்மா, மேலமாம்பலம், சென்னை – 600 033] 
      ஶ்ரீ மஹாபாரதம் என்ற அரும்பெரும் அற்புதமான இதிஹாஸத்தில் ஶ்ரீ முருகப்பெருமானின் அளவற்ற பெருமையை மார்க்கண்டேயர் கூறுவதை வனபர்வாவில் கண்டு ஸ்கந்த பக்தியைச் செய்ய வேண்டிய அவசியத்தையும் அறிந்து பெருவாழ்வு பெறலாம். முருகப் பெருமானின் பிறப்பு மஹாபாரதத்தில் மாறுதலாக இருப்பது கந்த புராணத்தைப் படித்தவர்களுக்குப் புரியும். நன்றாகா ஊன்றி கவனித்தால் மூலகிரந்தமான ஸ்காந்தமும் இதையே சொல்கிறது என்று தெளிவடையலாம். முருகப் பெருமானின் பிறப்பிலிருந்து சில அபூர்வ உலகு அறிய மஹாபாரதம் பேருதவி புரிகின்றது. குமரன் ஒருவராக இருப்பதில்லை. அவருடன் இருக்கும் தேவர்கள்,
                க்ரஹா: ஸோபக்ரஹாச்சைவ ரிஷயோ மாதரஸ்ததா |
       ஹுதாசன முகாச்சைவ த்ருப்தா: பாரிஷதாங்கணா: ||
       ஏதேசந்யோ பஹவ: கோரா: த்ரிதிவவாஸிந: |
       பரிவார்யமஹாஸேநம் ஸ்திதா: மாத்ருகணைஸ்ஸஹ ||

      ஸ்கந்த மூர்த்தியுடன் க்ரஹங்கள், உபக்ரஹ்ங்கள், ரிஷிகள், தாய்மார்கள், அக்னி பகவான் முதலாக எப்போதும் இருப்பார்கள். ஸ்கந்த மூர்த்தியைச் சேவிப்பவர்கள் இத்தனை தேவதைகளையும் சேர்த்து ஸேவித்த பலனை அடைவார்கள்.
      ஒரு சமயம் இந்திரன் படை பலத்துடன் ஸ்கந்தமூர்த்தியிடம் சண்டையிட வந்தான். அப்போது பகவான் ஸ்கந்தன் தனது முகத்தினாலேயே நெருப்பைக் கக்கி தேவர்களை தகிக்கச் செய்தார். தேவர்கள் நடுங்கி
                தஹ்யமாநா: ப்ரபன்னாஸ்தே சரணம் பாவகாத்மஜம் |
       தேவாவஜ்ரதரம் த்யக்த்வா தத: சந்திமுபாகதா: ||

      தஹிக்கப்பட்ட தேஹத்துடன் தேவர்கள் குமரனைச் சரணமடைந்தார்கள். இந்திரன் மேலும் கோபமடைந்து வஜ்ராயுதத்தை ஸ்கந்த மூர்த்தியின் வலது பார்கவத்தில் விட்டான். அதனால் ஶ்ரீ ஸ்கந்த மூர்த்தியின் வலது பார்ச்வம் பிளந்தது. அந்த பாகத்திலிருந்து விசாகன் என்ற மூர்த்தி பிறந்தார்.
                தத்விஸ்ருஷ்டம் ஜகாநாசு பார்ச்வம் ஸ்கந்தஸ்ய தக்ஷிணம் |
       வஜ்ரப்ரஹாராத் ஸ்கந்தஸ்ய ஸஞ்ஜாத: புருஷோபர: ||

       யுவா காஞ்சனஸந்நாஹ: சக்தித்ருக் திவ்யகுண்டல: |
       யத்வஜ்ரவிசநாஜ்ஜாத: விசாகஸ்தேந ஸோஷ்யவத ||

      விசாகன் என்ற மூர்த்தி சக்தியை ஏந்தி பிரகாசிக்கிறார். என்றுமே ஸ்கந்தன் விசாகனை விட்டுப் பிரிய மாட்டார். மேலும், இந்திரன் ஶ்ரீஸ்கந்த மூர்த்தியின் மேல் வஜ்ராயுதத்தினால் அடித்ததினால் அந்த விசாகமூர்த்தி பிறந்ததும், அவரிடமிருந்து பெண்களும், பிள்ளைகளும், கன்யகைகளும், குமாரர்களும் பிறந்தார்கள்.
                வஜ்ரப்ரஹாராத் கன்யாச்ச ஜக்ஞிரே(அ)ஸ்யமஹாபலா: |
       குமாராஸதே விசாகம் ச பிதருத்வே ஸமகல்பயன் ||

      இவர்களுக்கு ஸ்கந்த உபக்ரஹங்கள் என்று பெயர். ஶ்ரீஸ்கந்த மூர்த்தியிடம், விசாகருடன் ஸ்கந்த உபக்ரஹங்கள் என்ற கன்யகையும் – குமாரர்களும் இருப்பதைக் கண்டு இந்திரன் விரோதமாக ஶ்ரீஸ்கந்த மூர்த்தியிடம் போர் செய்து தோல்வியடைந்து ஶ்ரீஸ்கந்த மூர்த்தியைச் சரணடைந்து நீங்களே இந்திரனாக இருங்கள் என்று விண்ணப்பித்தான். அப்போது
                த்யமேவராஜா பத்ரம் தே த்ரைலோக்யஸ்ய மமைவ ச |
       கரோமிகிஞ்ச தே சக்ர சரஸநம்தத் ப்ரவீமி தே ||

       தாநவாநாம் விநாசாய தேவாநாம் அர்த்த ஸித்தயே |
       கோப்ராஹ்மணஹிதார்த்தாய ஸேனாபத்யேபிஷிஞ்சமாம் ||

      ஶ்ரீ ஸ்கந்தன் இந்திரனிடம் நீயே ராஜாவாக இரு. உனக்கு என்ன வேண்டுமோ அதை பூரணமாக செய்து கொடுக்கிறேன். அஸுரர்களை அழிக்கவும், கோக்களையும், பிராமணர்களையும் ரக்ஷிக்கவும் ஸேனாபதியாக இருக்கிறேன். எனக்கு ஸேனாபதி பட்டாபிஷேகம் செய்யலாம். அப்படியே ஸ்கந்தனுக்கு (குமரனுக்கு) ஸேனாபதி பட்டாபிஷேகம் செய்தார் இந்திரன்.
               
ஏவம் ஸ்கந்தஸ்ய மஹிஷீம் தேவஸேனாம் விதுர்ஜநா: |
       ஷஷ்டீம் யாம் ப்ராஹமணா: ப்ராஹு, லக்ஷ்மீ மாசாம்ஸுகப்ரதாம் ||

      தேவஸேனை என்ற பெண்ணையும் இந்திரன் தானம் செய்தார். அவளை ஷஷ்டி தேவி என்றூம் கூறுவர். அவள் லக்ஷ்மீ கடாக்ஷம், ஸுகம் முதலானவைகளைத் தரும் தெய்வம் தேவஸேனை, ஒரு சமயம் மாத்ருகண்ங்கள் என்ற தேவதைகள் ஸ்கந்த மூர்த்தியைப் பார்த்து
       வயம் ஸ்ர்வஸ்ய லோகஸ்ய மாதர: கவிபிஸ்துதா: |
       இச்சாம்: மாதரஸ்துப்பம் பவிதும் பூஜபஸ்வன: ||

      நாங்கள் இவ்வுலகுக்கு தாய்மார்கள் என்று கவிகள் கூறுகின்றார்கள். குமர, உனக்கும் நாங்கள் தாயாராக இருக்க ஆசைப்படுகிறோம். எங்களைப் பூஜிக்க வேணும். குமரனும் அதைக் கேட்டு கூறினார்.
                மாதரோஹி பவத்யோமே பவதீநாமஹம்ஸுத: |
       உச்யதாம் யன்மயாகார்யம் பவதீநாமதேப்ஸி ம் ||
               
      தாய்மார்களே, நீங்கள் எனக்கு தாயார்கள். உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும் என்றார். அப்பொழுது தாய்மார்கள்
      இச்சாம தாஸாம் மாத்ரூணாம் ப்ரஜாபோக்தும் ப்ரயச்சன:
      இவ்வுலகில் பிறக்கும் குழந்தைகளை எங்களுக்குக் கொடுத்து விடு என்றார்கள். குமரனும், அப்படியே கொடுத்து விட்டார். மேலும் குமரன் இந்தத் தாய்மார்களை குழந்தைகளை ரக்ஷிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அவர்களும் அப்படியே ஆகட்டும் என்றார்கள். அந்த சமயம் ஸ்கந்தனுடைய சரீரத்திலிருந்து நெருப்பு போன்ற ஒரு புருஷன் தோன்றினான்.
                தத: சரீராத் ஸ்கந்தஸ்ய புருஷ: பாவகப்ரப: |
       போக்தும் ப்ரஜாஸ்ஸமர்த்யானாம் நிஷ்பபாத மஹாப்ரப: ||

      அந்த புருஷன் “ஸ்கந்தாபஸ்மாரக்ஹமித்யாஹு: க்ரஹம் தம் த்விஜஸத்தமா.” ஸ்கந்த அ[அஸ்மாரக்ரஹம் என்று பெயர்.
                யேச மாத்ருகணா: ப்ரோக்தா: புருஷாச்சைவ யேக்ரஹா: |
       ஸர்வே ஸ்கந்தக்ரஹாநாம க்ஞேயாநித்யம் சரீரிபி: ||
               
இந்த மாதிரி கணங்களையும், புருஷக்ரஹங்களையும் ஸ்கந்த கிரஹங்கள் என்று மனிதனாகப் பிறந்தவன் அறிந்து கொள்ள வேணும். இவர்கள் என்ன செய்வார்கள்? மனித ஸமுதாயத்தில் யாவத் ஷோடச வர்ஷாணி சிசூனாம் ஹி அசிவா: தத: 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பலவித வியாதி வருவதைப் பார்த்திருக்கிறோம். அதாவது, கை கால்களை இழுப்பது, வாய் கிட்டிப்பது, நாக்கைக் கடிப்பது, மூர்ச்சையை அடைவது, புத்தி மாந்தியம், ஸதா ஜ்வரம், வளராமல் இருப்பது, குழந்தைகள் ஸதா கோபப்படுவது, கட்டுப்படாமல் இருப்பது. முரட்டுத்தனமாக இருப்பது, கவனம் இல்லாமல் இருப்பது, நல்வழி தோன்றாமல் இருப்பது போன்ற நிலை குழந்தைகளுக்கு இருப்பதை நாம் காண்கிறோம். அவைகள் தேவக்ரஹம், பிதிருக்ரஹம், ராக்ஷஸகரஹம், பைசாசக்ரஹம், யக்ஷக்ரஹம் போன்றவைகள். இவைகள் குழந்தைகளை 16 வயதுக்குள் வளரவிடாமலும், வலிப்பு போன்ற வியாதிகளைத் தோன்றச் செய்கின்றன. இவைகளைப் போக்க, ஸ்கந்த மூர்த்தியையும், மாத்ருகணங்களையும் வழிபாடு செய்ய வேண்டும்.
                தேஷாம் ப்ரசமனம் கார்யம் ஸ்நாநம் தூமமதாஞ்ஜனம் |
       பலி கர்மோபஹாரச்ச ஸ்கந்தஸ்யேஜ்யா விசேஷத: ||

      இதற்குப் பரிஹாரம் ஸ்நாநம், தூபம், அஞ்சனம், பலி போடுதல், கர்மாவான சாந்தி செய்தல், முருகனை வழிபாடு என்ற முறையில் யாகம் செய்தல் முதலியவைகளாம். ஸ்கந்த கிரஹங்கள்
                ஆஸ்திகம் ச்ரத்ததானம் ச வர்ஜயந்தி ஸதாக்ரஹா: |
       நஸ்ப்ருசந்திக்ரஹா பக்தான் நரான் தேவம் மஹேச்வரம் ||

      ஆஸ்திகர்களையும், சிரத்தை உடையவர்களையும், பக்தர்களையும், தேவனையும் தொடமாட்டார்கள். மஹாபாரதம் என்ற அரும்பெரும் இதிஹாஸத்தில், மார்க்கண்டேய முனிவர் தர்மபுத்திரரிடம் ஸ்கந்த பக்தி பண்ணவேண்டிய அவசியத்தையும், ஸ்கந்த மூர்த்தி செய்யும் உபஹாரத்தையும் கூறியது மார்க்கண்டேய ஸமஸ்யாபர்வா என்று வனபர்வாவில் உள்ளது. அதில் ஸ்கந்த புராணத்தை விட வேறு சிவ தர்மங்கள் உள்ளன. அதாவது குழந்தைகளுக்கு வரும் வலிப்பு ஆகியவை மிகவும் கொடுமையானது. அது எங்கிருந்து உண்டானது, இன்னமும் அதுபோன்ற நோய்கள் எந்த கிரஹத்தினால் உண்டாகிறது. இதைப் போக்கும் வழி என்ன என்றும், மஹாபாரதம் நோய் ஒழிப்பைத் தெரிவிக்கவே ஸ்கந்த உபாஸனம் அவசியம் என்று கூறுகிறது. ஸ்கந்த பக்தி பலவித ஸெளபாக்கியத்தைப் கொடுக்கும் என்றும் கூறுகிறது.
                ப்ரஹ்மப்ரியோ ப்ராஹ்மணஸவ்ரதீத்வம் ப்ரஹ்மக்ஞோ
                                   வைப்ராஹ்மணாநாம்ச நேதா |
       ப்ரஹ்மண்யோவை ப்ரஹ்மஜோ ப்ரஹ்மவிச்வ ப்ரஹ்மே
                                   சயோ ப்ரஹ்மவதாம் வரிஷ்ட: ||
       ஸ்வாஹாஸ்வதாத்வம் பரமம் பலித்ரம் மந்த்ரஸ்துதஸ்
                                   த்வம் ப்ரதித: ஷடர்ச்சி: |
       நமோஸ்து தே த்வாதச நேத்ரபாஹோ அத: பரம் வேத்யி
                                          கதிம் நதே(அ)ஹம் ||

      பரப்ரம்ம ஸ்வரூபமான ஸுப்ரஹ்மண்யத்தை ப்ரம்ம சப்தத்தால் கொண்டாடி 12 கண்கள் 12 கைகள் உடையவரை விட வேறு கதி எனக்குக் கிடையாது என்று கூறும் அத்புதத்தை உணர்ந்து சிவஞான பூஜா மலரில் வரும் இந்த கட்டுரையை ஏற்று ஸ்கந்த மூர்த்தியின் கிருபையைப் பெற வேண்டுகின்றோம்.

சிவம்.